டான்செட் நுழைவுத் தேர்வு காரணமாக வரும் 14 ஆம் தேதி அன்று தமிழகத்தின் அனைத்து கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். 

டான்செட் நுழைவுத் தேர்வு காரணமாக வரும் 14 ஆம் தேதி அன்று தமிழகத்தின் அனைத்து கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை & அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு அண்மையில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், டான்செட் தேர்வுக்கு மொத்தம் 36 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பித்தனர். இதில் எம்பிஏ படிப்பில் சேர 21 ஆயிரத்து 557 பேரும், எம்சிஏ படிப்பில் சேர 8 ஆயிரத்து 391 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர 6 ஆயிரத்து 762 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் மே 2 ஆம் தேதி முதல் தேர்வுக்கு முந்தைய தினம் 13 ஆம் தேதி (நாளை முதல் மே 13 ஆம் தேதி) வரை ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த நிலையில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் தேர்வை எழுதும் வகையில், தேர்வு நடைபெறும் நாளான மே 14 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.