6 நாட்டு தூதரங்களுக்கு மிரட்டல்...!! அல்கய்தா தீவிரவாத இயக்கத்தினர் 3 பேர் மதுரையில் கைது ...!!! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையில், அல்கய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் அதிரடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் ஆறு நாட்டு தூதரங்களுக்கு தொடர்ந்து, மிரட்டல் விடுத்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் தற்போது கைப்பற்றப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அல்கய்தா இயக்கத்தை சேர்ந்த இந்த மூன்று பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பினரும், போலிசாரும் சேர்ந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.