Asianet News TamilAsianet News Tamil

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

9 ias-officers-transfer
Author
First Published Nov 7, 2016, 2:57 AM IST


மத்திய அரசுப் பணியில் இருந்த 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நேற்று பிறப்பித்தார். அதன் விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்).

ஜானி டாம் வர்கீஸ்               - கடலூர் மாவட்ட உதவி ஆட்சியர் - (மத்திய அரசின் கனிம வளத் துறை உதவிச் செயலாளர்)

வி.பி.ஜெயசீலன்                    - செங்கல்பட்டு சார் ஆட்சியாளர் - (நிதி ஆயோக் அமைப்பின் உதவிச் செயலாளர்)

தீபக் ஜாக்கப்                          - தூத்துக்குடி சார் ஆட்சியாளர் - (மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையின் உதவிச் செயலாளர்)

 பி.ஆகாஷ்                              - திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியாளர் (மத்திய அரசின் நீதித் துறை உதவிச் செயலாளர்)

கே.பி.கார்த்திகேயன்              - வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியாளர் (மத்திய அரசின் வர்த்தகம்-தொழில் துறை உதவிச் செயலாளர்)

கிள்ளி சந்திரசேகர்                  - மதுராந்தகம் சார் ஆட்சியாளர் (மத்திய அரசின் புதிய-புதுப்பிக்க எரிசக்தித் துறை உதவிச் செயலாளர்)

எம்.பிரதீப்குமார்                   - கும்பகோணம் சார் ஆட்சியர் (மத்திய அரசின் உயர்கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறை உதவிச் செயலாளர்)

கிரேஸ் லால்ரிண்டிகி பச்சோவ் - தாராபுரம் உதவி ஆட்சியாளர் (மத்திய அரசின் ஊராட்சித் துறை உதவிச் செயலாளர்)

ஷர்வன் குமார் ஜடாவத்       - திருப்பூர் உதவி ஆட்சியாளர் (மத்திய அரசின் தகவல்-ஒலிபரப்புத் துறை உதவிச் செயலாளர்)

Follow Us:
Download App:
  • android
  • ios