தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 40பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 39 ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 40பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 39 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 39பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 47 ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,54,058 ஆக உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 505 ல் இருந்து 488 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,545 ஆக உள்ளது.
