Asianet News TamilAsianet News Tamil

வெறும் இரண்டு நாளில் 358 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..நாளை விடுமுறையால் இன்றும் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு..

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய இருதினங்களில் மட்டும் ரூ. 358 கோடி தொகைக்கு டாஸ்மாக் கடைகளில்  மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சமீபத்திய புல்லிவிவரங்களின் படி, கடந்த 12ம் தேதி ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினமான நேற்று, ரூ.200 கோடிக்கும் கோடிக்கும் அதிகமான மதிப்பில் மது விற்பனையாகியுள்ளது.                 
 

358 crore worth of liquor sold in two days
Author
Tamilnádu, First Published Jan 14, 2022, 3:57 PM IST

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய இருதினங்களில் மட்டும் ரூ. 358 கோடி தொகைக்கு டாஸ்மாக் கடைகளில்  மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  சமீபத்திய புல்லிவிவரங்களின் படி, கடந்த 12ம் தேதி ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினமான நேற்று, ரூ.200 கோடிக்கும் கோடிக்கும் அதிகமான மதிப்பில் மது விற்பனையாகியுள்ளது.                 

நாளை (15-ந் தேதி) திருவள்ளூர் தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால் அன்றைய தினமும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் மதுபானக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று தினங்கள் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதற்கு முந்தைய தினங்களிலே மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. குறிப்பாக, நாளை திருவள்ளூர் தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று மதுபானக் கடைகளில் மேலும் கடும் கூட்டம் மோதும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.  

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு தமிழ்நாடு நாடு முழுவதும் அதிகரித்து வருவதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை  தமிழக அரசு விதித்துள்ளது. வரும் 16ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது . அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 31ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கையாக, 14-ந் தேதி முதல் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் மட்டுமின்றி தைப்பூசம் தினமான 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகள் குறித்து, எந்த அறிவிப்பும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios