அடையாளம் தெரியாத 3 பேர் ரயில் மோதி பலி – போலீசார் விசாரணை...
சென்னையில் அடையாளம் தெரியாத 3 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தனர்.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தை கடக்க முயன்ற 30 வயது மதிக்கதக்க ஆண் நபர் ரயில் மோதி பலியானார்.
அதே போல் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்க முயற்சித்த40 வயது மதிக்கதக்க ஒருவரும் பலியாகியுள்ளார்.
மேலும் அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையம் இடையே ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.
இந்த 3 சம்பவங்களும் இன்று அதிகாலை நடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.