தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மூன்று முக்கிய இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பழனிசாமி, குப்புசாமி மற்றும் உஷா ராணி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மூன்று முக்கிய இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இந்த மாற்றங்களின்படி, தற்போது தனியார் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, பாடநூல் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த குப்புசாமி, புதிய தனியார் பள்ளிகள் இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக இருந்த உஷா ராணி, பாடநூல் கழகத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


