ஜல்லிக்கட்டுக்கு பெருகும் ஆதரவு - 1968ம் ஆண்டு நடத்தப்பட்ட 'ஏறுதழுவல் விழா' அழைப்பிதழ்!
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1968ம் ஆண்டு சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டு கிராமத்தில் நடந்த ‘ஏறுதழுவல் விழா’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கான அழைப்பிதழ் நகல், தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், மேலும் எழுச்சி பெற்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.