1.5 kg gold worth Rs 42 lakh was seized and two person arrested by police
சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

கொழும்புவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கொழும்பு, ஷார்ஜாவில் இருந்து வந்த ஷேக் அலி, ஷேக் பானு ஆகியோரிடம் சுமார் ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் இருப்பது தெரிய வந்தது.
பின்னர், அவர்களிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
