Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஜெ. மறைவு எதிரொலி : 10, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

10th 2-exam-change
Author
First Published Dec 7, 2016, 8:12 AM IST


முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வரும் 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios