Asianet News TamilAsianet News Tamil

1 - 12 ஆம் வகுப்பு அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் எப்போது..? விடுமுறைகள் எத்தனை நாட்கள்..? அறிவிப்பு வெளியானது

2022- 23 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு, காலாண்டு தேர்வு குறித்து தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ ஒன்பதாம்‌ வகுப்புகளுக்கு வரும்‌ 2023ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ 20 முதல்‌ 26ஆம்‌ தேதி வரை இறுதித்‌ தேர்வு நடைபெறும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

1 - 12th class quarterly, half yearly examination date announcement
Author
Tamil Nadu, First Published May 25, 2022, 4:06 PM IST

தமிழகத்தில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கான ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அதே போல் 11 ஆம் வகுப்பு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரித்தார். அதோடுமட்டுமல்லாமல், மாநில பாடத்திட்டத்தின் செயல்படும் பள்ளிகளில் பயிலும் 10,11, 12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு தேதி வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அறிவிப்பு.. முழு விபரம்..

அதன் படி 10 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 3 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 14 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 ஆம் தேதியும் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. மேலும் கொரோனா கால அட்டவணை போல் அல்லாமல், அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்றும் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அடுத்த ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

இந்நிலையில் வரும் 2022- 23 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு, காலாண்டு தேர்வு குறித்து தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதுக்குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” 2022ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 23ஆம்‌ தேதி பிளஸ்‌ 1 மற்றும்‌ பிளஸ்‌ 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கும்‌. 1 முதல்‌ 10ஆம்‌ வகுப்பு வரை செப்டம்பர்‌ 26 ஆம்‌ தேதி காலாண்டு தேர்வு தொடக்கம்‌. செப்டம்பர்‌ 30 தேதியுடன்‌ காலாண்டு தேர்வு முடிவடையும்‌.

அதுபோல, 2022ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 16ஆம்‌ தேதி பிளஸ்‌ 1 மற்றும்‌ பிளஸ்‌ 2 மாணவர்களுக்கு அரையாண்டு
தேர்வு தொடங்கும்‌. டிசம்பர்‌ 19ஆம்‌ தேதி 1 முதல்‌ 10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத்‌ தேர்வுகள்‌
தொடங்கும்‌. அரையாண்டு தேர்வுகள்‌ டிசம்பர்‌ 23ஆம்‌ தேதி முடிந்து 2023ஆம்‌ ஆண்டு ஜனவரி 2ஆம்‌ தேதி விடுமுறை
முடிந்த மீண்டும்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌.அதுபோல, ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ ஒன்பதாம்‌ வகுப்புகளுக்கு வரும்‌ 2023ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ 20 முதல்‌ 26ஆம்‌ தேதி வரை இறுதித்‌ தேர்வு நடைபெறும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி.. அனைத்து சனிக்கிழமைகளும் இனி விடுமுறை.. அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை..

Follow Us:
Download App:
  • android
  • ios