Asianet News TamilAsianet News Tamil

காது குத்து விழா.. குழந்தை கேட்ட ஒற்றை வார்த்தை.. அரசு பெண் மருத்துவர் மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை..!

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலை பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் கோகுல் (37). மருத்துவரான இவர் தொட்டியத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவி சஞ்சினி(30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2018ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஜிஷ்னு என்ற மகன் உள்ளார்.

trichy government woman doctor commits suicide
Author
Trichy, First Published Sep 21, 2021, 1:58 PM IST

மகனுக்கு காது குத்து விழா முடிந்து வீடு திரும்பிய அரசு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலை பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் கோகுல் (37). மருத்துவரான இவர் தொட்டியத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவி சஞ்சினி(30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2018ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஜிஷ்னு என்ற மகன் உள்ளார்.

trichy government woman doctor commits suicide

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். கோகுல் தொட்டியத்தில் வசித்து வருகிறார். சஞ்சினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல மருத்துவர் கோவிந்தராஜ்(81) என்பவருடன் வசித்து வந்தார். அதுமட்டுமின்றி சஞ்ஜினி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில்  தனியான மருத்துவமனையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் மகன் ஜிஷ்னுக்கு காது குத்து விழாவை சஞ்சினி நேற்று காலை நடத்தினார். இதில், அவரது உறவினர்கள் மட்டுமின்றி நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கணவர் மட்டும் பங்கேற்கவில்லை. அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. 

trichy government woman doctor commits suicide

இதனையடுத்து, விழா முடிந்ததும் சஞ்ஜினி குழந்தையை அழைத்து கொண்டு வீட்டு வந்துவிட்டார். பின்னர், திடீரென வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கே.கே.நகர் மகளிர் போலீசார் சஞ்ஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகனின் காது குத்து விழாவின் போது கணவரை பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios