Asianet News TamilAsianet News Tamil

கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மீது கார் மோதி விபத்து.. சிறுமி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலி.!

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

trichy car accident...6 people killed
Author
First Published Mar 19, 2023, 6:28 AM IST

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்ப இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க:- இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு செக் வைக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. நாளை என்ன நடக்கும்? திக்.. திக்..!

trichy car accident...6 people killed

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:- ஃபர்ஸ்ட் நைட்! இன்ட்ரஸ்ட் இல்லாத கணவர்! ஆண்மை பரிசோதனை செய்ததால் மனைவி, மாமியாரை கதறவிட்ட புதுமாப்பிள்ளை.!

trichy car accident...6 people killed

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் துரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios