Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் விவசாயிகள் எலியை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - அய்யாகண்ணு வேதனை

தமிழகத்தில் விவசாயிகள் உணவுக்கு பதிலாக எலியை கடித்து உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி திருச்சியில் விவசாயிகள் எலியை கடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers did a rat eating protest in trichy
Author
First Published Aug 10, 2023, 5:13 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 14வது  நாளாக வாயில் எலியை கடித்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும்.

ஜெயிலர் படத்துக்கு ரஜினி ஹீரோ, எங்களுக்கு எடப்பாடி தான் ஹீரோ - செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடித்தம் செய்யும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான  4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ராணிப்பேட்டையில் பேருந்தில் பயணித்த 70 வயது முதியவரிடம் ரூ.4 லட்சம் பணத்தை திருடிய நபர் கைது

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, தமிழக விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு உகந்த விலை இல்லை. கரும்புக்கு உகந்த விலை இல்லை. விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் அரசு இதை கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில்  செயல்படுகிறது. அதேபோன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரை கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்து, அத்தியாவசிய பொருளை வாங்கக்கூட வழியில்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆகையால் விவசாயிகள் உணவுக்கு பதிலாக எலியை உன்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios