Asianet News TamilAsianet News Tamil

ஃப்ரிட்ஜில் வைத்த நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை.. சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழப்பு..!

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-year-old child killed after eating noodles
Author
Trichy, First Published Jun 20, 2022, 2:20 PM IST

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நெம்பர்  ஒன் டோல்கேட் அருகேயுள்ள தாளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது மகன் சாய் தருண் (2). இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி குழந்தைக்கு நூடுல்ஸ் உணவு தயாரித்து கொடுத்துள்ளார். மீதமிருந்த நூடுல்சை குளிர்சாதன பெட்டியில் வைத்த அவர் மறுநாள் காலையும் அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கொடுத்ததாக தெரிகிறது. இதனால், சோர்வாக காணப்பட்ட சாய் தருண் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தான். 

2-year-old child killed after eating noodles

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறியடிக்கொண்டே சிறுவனை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

2-year-old child killed after eating noodles

இதுதொடர்பாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளிடம் போலீசாரின்  முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரித உணவான நூடுல்ஸை உண்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios