Asianet News TamilAsianet News Tamil

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஸ்கூல் சொல்லிட்டு உடனே விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. 

Tomorrow is a holiday for schools in Tiruvarur district
Author
First Published Feb 17, 2023, 1:39 PM IST

மகா சிவராத்திரியை முன்னிட்டு  திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- வடபழனியில் சென்டர் மீடியனில் வேன் மோதி விபத்து... 10 ஐ.டி. ஊழியர்கள் காயம்..!

Tomorrow is a holiday for schools in Tiruvarur district

நாளை மாசி மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! அடிக்கடி விடுமுறை எடுத்த ஆசிரியர்கள் ஆப்பு? பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Follow Us:
Download App:
  • android
  • ios