Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் அபிநந்தன்!! சென்னையில் நெல்லை தம்பதி !! - வீர சாகச செயலுக்கான "வீரதீர" விருது ...

அதீத திணிச்சலுக்கான  முதல்வரின் சிறப்பு விருது  தமிழக அரசின் சார்பில் நெல்லையில் கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது  .

nellai couple gets bravery award
Author
Tamil Nadu, First Published Aug 15, 2019, 3:12 PM IST

73 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது . சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார் .

nellai couple gets bravery award

பின்னர் இந்த வருடத்திற்கான சுதந்திர தின விருதுகள் வழங்கப்பட்டன . அதில் அதீத திணிச்சலுக்கான  முதல்வரின் சிறப்பு விருது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொள்ளையர்களை அடித்து ஓட ஓட விரட்டிய வயதான தம்பதிகளான சண்முகவேல் - செந்தாமரை ஆகியோருக்கு வழங்கப்பட்டது . இருவரும் முதல்வர் கரங்களால் பதக்கமும் , இரண்டு லட்சத்திற்கான காசோலையையும், சான்றிதழும்  பெற்றுக்கொண்டனர் . இதற்காக அவர்கள் இருவரையும் அம்பாசமுத்திரம் தாசில்தார் நேற்று இரவு தூத்துக்குடி விமானத்தில் சென்னை அழைத்து வந்தார் .

nellai couple gets bravery award
 

இதே போல டெல்லியில் வீர் சக்ர  விருது , விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பிரதமர் மோடி வழங்கினார் .

Follow Us:
Download App:
  • android
  • ios