Asianet News TamilAsianet News Tamil

இந்த 4 மாவட்டங்களில் ஊத்து ஊத்துனு ஊத்தப்போகும் கனமழை... வானிலை மையம் பகீர் எச்சரிக்கை..!

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

Heavy rainfall in 4 districts... Warning to fishermen... meteorological centre
Author
Thirunelveli, First Published Dec 20, 2019, 1:23 PM IST

ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

Heavy rainfall in 4 districts... Warning to fishermen... meteorological centre

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது, மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rainfall in 4 districts... Warning to fishermen... meteorological centre

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும், 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios