Asianet News TamilAsianet News Tamil

வீடு தேடி வந்த திமுக எம்.எல்.ஏ !! நெகிழ்ச்சியில் உறைந்த தம்பதி ...

நெல்லையில் கொள்ளையர்களை அடித்து விரட்டிய வீரத்தம்பதிகளை திமுக எம்.எல்.ஏ பூங்கோதை நேரில் சென்று பாராட்டினார் .

dmk mla congratulates eldery couple
Author
Tamil Nadu, First Published Aug 20, 2019, 2:57 PM IST

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (68 ).இவரது மனைவி செந்தாமரை (65 ). சண்முகவேல் அங்குள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார் . இவர்களுக்கு இரண்டு மகன்கள் , ஒரு மகள் .அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகவேல் வீட்டின் முன்பு அமர்ந்து செய்தித்தாள் வாசித்து  கொண்டிருந்தார் . அப்போது பின் பக்கமாக வந்த கொள்ளையன் ஒருவன் அவர் கழுத்தில் துண்டை கட்டி இறுக்கியுள்ளான் .

dmk mla congratulates eldery couple

 இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகவேல் கூச்சல் போட்டுள்ளார் .  சத்தம் கேட்டு வெளியே வந்த செந்தாமரை கொள்ளையனை கையில் கிடைத்த பொருள்களை கொண்டு எறிந்து தாக்கி உள்ளார் .  உடனே மற்றொரு கொள்ளையன் வந்து செந்தாமரையை தாக்கியுள்ளான். அதற்குள் சுதாரித்து எழுந்த சண்முகவேல் இரு கொள்ளையர்களை நாற்காலியை கொண்டு அடித்து  விரட்டினர் . எனினும் செந்தாமரை கழுத்தில் இருந்த 4 சங்கிலியை கொள்ளயர்கள் திருடி சென்றனர் .கொள்ளையர்களோடு சண்டையிட்டதில் செந்தாமரைக்கு கையில் சிறிய காயம் ஏற்பட்டது . 

இவர்கள் இருவரையும் பாராட்டி முதல்வர் பழனிசாமி கடந்த 15 ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விருது வழங்கி கௌரவித்தார் . இந்த நிலையில் நேற்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூங்கோதை , அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார் . 

dmk mla congratulates eldery couple

இன்னும் பல்வேறு தரப்பில் இருந்து வீரமாக செயல்பட்ட அந்த வயதான தம்பதியை பாராட்டிய வண்ணம் உள்ளனர் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios