Asianet News TamilAsianet News Tamil

அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்... 2 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

கமுதி அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

Bike Accident...2 youth dead
Author
Tamil Nadu, First Published Nov 26, 2019, 5:20 PM IST

கமுதி அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் சத்யா (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சின்ராம் மகன் ஈஸ்வரன் (21), சத்தியமூர்த்தி மகன் சோலைராஜ் (22) ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், நேற்று மாலை பார்த்திபனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். 

Bike Accident...2 youth dead

அப்போது, இளைஞர்கள் அரசு வேகத்தில் சென்றிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது. பின்னர், சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் 3 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில், படுகாயமடைந்த ஈஸ்வரன், சோலைராஜ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

Bike Accident...2 youth dead

மேலும், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சத்யாவை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios