Asianet News TamilAsianet News Tamil

ஓசூர் அருகே கோர விபத்து.. 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

Hosur Car accident... 3 Youth Killed tvk
Author
First Published Nov 26, 2023, 12:29 PM IST

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தோஷ், தமிழன்பன், நரேஷ் யஷ்வந்த் என்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

Hosur Car accident... 3 Youth Killed tvk

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Hosur Car accident... 3 Youth Killed tvk

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிக்னல் கொடுக்காமல் லாரி திடீரென சாலையோரம் திரும்பியதால் பின்னால் வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது. விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios