Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத கொரோனா... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு..!

ஓசூரில் கொரோனா நோய் தொற்றுக்கு சகோதரிகள் 3 பேர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

4 members of the same family were dead by the corona
Author
Krishnagiri, First Published May 20, 2021, 11:27 AM IST

ஓசூரில் கொரோனா நோய் தொற்றுக்கு சகோதரிகள் 3 பேர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் சகோதரிகளான ஜீவா, வசந்தா, கலா ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தாவின் மகன் லோகேஷ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது, வசந்தாவும் அவரது சகோதரிகளும் அடிக்கடி லோகேஷை பார்த்து நலம் விசாரித்து வந்திருக்கிறார்கள்.

4 members of the same family were dead by the corona

இதனால், அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று பரவியது. உடனே 4 பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வசந்தா, கலா, ஜீவா ஆகியோர் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்தனர். லோகேஷ்  நோய் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கிறார்.

4 members of the same family were dead by the corona

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் கலாவின் மகன் பாபுவும் நேற்று உயிரிழந்தார். சகோதரிகள் 3 பேர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஓசூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios