Asianet News TamilAsianet News Tamil

கைக்குழந்தைக்கு தாய் பால் ஊட்டிக்கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து பலி; ஈரோட்டில் பரபரப்பு

ஈரோட்டில் கைக்குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்த இளம் பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

young woman Suspicious Death died in erode district vel
Author
First Published Oct 10, 2023, 5:12 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த பூமடைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மதன்குமார் பூரணி தம்பதி. இவர்களுக்கு 6 மாதத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது. பூரணி வழக்கம் போலு தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென குழந்தை வீரிட்டு அழவே பதறிப்போன மதன்குமார் உடனடியாக அறைக்குள் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது பூரணி மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மதன்குமார் உறவினர்கள் உதவியுடன் பூரணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சேலத்தில் துப்புரவு பணியாளர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் கைது

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அங்கே பூரணி பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios