தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல் துறை பாதுகாப்பு கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred Source

திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். வேட்பாளர் என்ற முறையில் எல்லா வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


திருமாவளவனின் இந்த மனு மீதான விசாரணை, ஏப்ரல் 1 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. திருமாவளவன் திடீரென இந்த மனுவை தக்கல் செய்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
