Asianet News TamilAsianet News Tamil

தடபுடலாக திருமண ஏற்பாடு..திடீரென விபத்தில் உயிரிழந்த காதலன்.. மீளமுடியாத மனவேதனையில் காதலி தற்கொலை..!

அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல்  பிரியா மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், இறந்து போன பாலாஜிக்கு நேற்று முன்தினம் கருமகாரியம் நடந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரியா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர். 

Lover killed in accident.. College student commits suicide
Author
Cuddalore, First Published Mar 29, 2022, 2:18 PM IST

விபத்தில் காதலன் உயிரிழந்த மனவேதனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்தில் காதலன் பலி

கடலூர் மாவட்டம் சாலக்கரை அருகே திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலாஜி என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். நாளடைவில் இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து இருவீட்டார் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு வருகிற சித்திரை மாதம் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜி சாலை விபத்தில் உயிரிழந்தார். 

Lover killed in accident.. College student commits suicide

தற்கொலை

இதனால், அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல்  பிரியா மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், இறந்து போன பாலாஜிக்கு நேற்று முன்தினம் கருமகாரியம் நடந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரியா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர். 

Lover killed in accident.. College student commits suicide

சோகத்தில் கிராமம்

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த தூக்கத்தில் காதலி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios