Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே... இதுக்கு கூடவா தற்கொலை செய்வீங்க... மனைவியின் உடலை பார்த்து கதறி துடித்த கணவர்..!

குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Wife commits suicide after husband condemns beating child
Author
Chennai, First Published Oct 17, 2020, 5:54 PM IST

குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் எல்ஐசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் தனபாலன், தனியார் ஐடி நிறுவனத்தில் சேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோகுலபிரியா(27). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக குழந்தையின் சேட்டையை தாங்கமுடியாமல் கோகுலபிரியா அடிக்கடி திட்டுவதும் அடிப்பதுமாக இருந்து வந்துள்ளார்.

Wife commits suicide after husband condemns beating child

இதனை கணவர் தனபாலன் அவ்வப்போது கண்டித்து வந்திருக்கிறார். இதில், கோகுலபிரியா கடும் மனஉளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மாலை கோகுலபிரியா குழந்தையை அடித்ததை தனபாலன் மீண்டும் கண்டித்திருக்கிறார். இதில், மனமுடைந்த கோகுலபிரியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சிக்கு தெளிக்கும் மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

Wife commits suicide after husband condemns beating child

இதனையடுத்து, வாயில் நுரை தள்ளிய நிலையில் மனைவி மயங்கி நிலையில் இருப்பதை கண்டு கணவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடஅன அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோகுலபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios