Asianet News TamilAsianet News Tamil

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு (OTR) வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 

TNPSC Good news.. Extension of time to aadhaar number link with OTR
Author
Chennai, First Published Feb 26, 2022, 5:48 AM IST

டிஎன்பிஎஸ்சி  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு (OTR) வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

TNPSC Good news.. Extension of time to aadhaar number link with OTR

இந்நிலையில், OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 30 வரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நீட்டித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி  குரூப் 1 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்து வருவதால் இணையதளம் வேகம் குறைவாக உள்ளதால் விண்ணப்பிப்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கான காலக்கெடுவை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.  ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios