அதிர்ச்சி செய்தி... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்... தடுமாறும் தலைநகரம்..!
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,77,279ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மட்டும் 775 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 12,157 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,241 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,52,463-ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,659 ஆக அதிகரித்துள்ளது.