Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

tamil nadu government orders e pass compulsory who are coming to the state from other parts of the country
Author
Chennai, First Published Mar 7, 2021, 6:12 PM IST

புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது.

நாட்டின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து, மேற்கூறிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களின் வழியாக தமிழகம் வருபவர்களுக்கும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியாக 3 நாட்களுக்கும் குறைவான பயணமாக தமிழகம் வருவோருக்கு குவாரண்டினில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios