கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் காய்கறி அங்காடிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல், அவ்வப்பொழுது கைகழுவும் திரவம் (அ) சோப்பு கரைசல் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கடையின் உரிமையாளர்கள் கண்காணித்து உறுதிசெய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சீரான நிலையில் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும்.

மேலும், கடைகளின் வாயிலில் டெட்டால் (அ) சானிடைசர்கள் போன்ற கைக்கழுவும் திரவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் கடைகளுக்கு செல்லும் பொழுது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டெட்டால், சானிடைசர்கள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தான் கடைக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தக்க அறிவுரை வழங்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்குறிப்பிட்ட கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பது தெரியவந்தால், தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
