Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் தண்ணீரை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

தமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தற்போது டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

South Indian Tanker Truck strike
Author
Tamil Nadu, First Published Jun 22, 2019, 5:45 PM IST

தமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தற்போது டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. South Indian Tanker Truck strike

தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்தும், விடுபட்ட லாரிகளுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் ஜூலை 1-ம் தேதி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். South Indian Tanker Truck strike

இந்நிலையில், டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்வதால் தென்னிந்தியாவில் கேஸ் விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், சமையல் எரிவாயு விலை, மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios