Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் அதிர்ச்சி.. ஓடும் காரில் கண்ட இடத்தில் கை வைத்து இளம்பெண்ணுக்கு தொந்தரவு.. கூச்சலிட்டதால் பரபரப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் இருந்த பெண் ஒருவர்  திடீரென அலறி கூச்சலிட்டுள்ளார். நீண்ட நேரமாக அந்தப் பெண் காரில் இருந்து கூச்சலிட்ட படியே வந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

Sexual harassment of a young women in a moving car...police investigation
Author
Chennai, First Published Nov 24, 2021, 1:25 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் காரில் சென்றுகொண்டிருந்த பெண் திடீரென கூச்சலிட்டதையடுத்து, காரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து, கூச்சலிட்ட பெண் மதுபோதையில் இருந்த நிலையில், இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் இருந்த பெண் ஒருவர்  திடீரென அலறி கூச்சலிட்டுள்ளார். நீண்ட நேரமாக அந்தப் பெண் காரில் இருந்து கூச்சலிட்ட படியே வந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

Sexual harassment of a young women in a moving car...police investigation

இதனையடுத்து, நுங்கம்பாக்கத்தில் அந்த காரை காவல் துறையினர் விரட்டி மடக்கி பிடித்துள்ளனர். காவல் துறையினர் மடக்கி பிடித்த பொழுது அந்த  காரில் இருந்த 3 இளைஞர்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்தவர்களை விசாரிப்பதற்காக இறங்குமாறு தெரிவித்துள்ளனர். அந்த காரை ஒரு இளைஞர் ஓட்டி வந்துள்ளார், முன்புறம் ஒரு இளைஞர் அமர்ந்து வந்துள்ளார். பின்புறம் இருக்கையில் ஒரு இளைஞர் மற்றும் ஒரு பெண் அமர்ந்து வந்துள்ளனர்.

Sexual harassment of a young women in a moving car...police investigation

பின்புறம் அமர்ந்து வந்த பின்தான் கூச்சலிட்டு வந்துள்ளார். கூச்சலிட்ட பெண் மதுபோதையில் இருந்த நிலையில், இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும், அப்பெண்ணை காரில் இருந்து இறங்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால், போதையில் இருந்த இளம்பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து, இளம்பெண் மற்றும் 3 இளைஞர்களையும் விசாரணைக்காக காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் நுங்கம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios