சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் புதிய பதவி!
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள், வழக்கறிஞர் வித்யா ராணி, பாஜகவில் இணைந்ததை அடுத்து அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள், வழக்கறிஞர் வித்யா ராணி, பாஜகவில் இணைந்ததை அடுத்து அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004 ஆம் ஆண்டு அதிரடி படையினரால் சுற்றி வளைத்து சுட்டு கொல்லப்பட்டார். அவருக்கு முத்து லட்சுமி என்கிற மனைவியும், விஜயலக்ஷ்மி, மற்றும் வித்யா ராணி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞரான வித்யா ராணி , பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜக கட்சியில் இணைந்தது குறித்து பேசிய போது, மக்களுக்கு சேவை செய்யவே கட்சியில் இணைந்திருப்பதாகவும். தன்னுடைய தந்தையின் எண்ணமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என கூறினார்.
இந்நிலையில், பாஜக கட்சியில் அதிரடியாக பல்வேறு பதவிகளை தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்துள்ள நிலையில், வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.அவர் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.