கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மற்ற இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். பலர்க்கு கண்பார்வை பாதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்டனர். சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மார்ச் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு!
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டிக்கு என்ற கோவிந்தராஜ் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர்களிடம் இருந்து விஷ சாராய மாதிரிகள் பறிமுதல் செய்யபட்டு இவர்கள் தான் விற்பனை செய்து உறுதி படுத்தபட்டுள்ளது. இவர்கள் மோசமான மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகள் இவர்களுக்கு விதமான கருணையும் காட்டக்கூடாது. இவருக்கு எதிராக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களுக்கு மேல் இவர்கள் சிறையில் உள்ளனர். தாமோதரன் உடல் ஊனமுற்றவர். விஜயா ஒரு பெண் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மட்டும் தாமோதரன் இருவருக்கும் தற்போது ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகை ரஞ்சனா நாச்சியாரை ஞாபகம் இருக்கா? பாஜகவிலிருந்து விலகினார்! எதற்காக தெரியுமா?
பின்னர் இருவரின் மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை எடுத்து இருவரின் மனுகளை திரும்ப பெற அனுமதி அளித்து ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே வேளையில் பரமசிவம், விஜயா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
