சென்னை காவலர்களுக்கு குட்நியூஸ்.. பிறந்தநாள் அன்று விடுமுறை.. மகேஷ்குமார் அகர்வாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு
சென்னை மாநகர காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களது பிறந்தநாளன்று விடுப்பு வழங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களது பிறந்தநாளன்று விடுப்பு வழங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் காவல்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டு, சில காவலர்கள் பொது மக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கிடையில் காவலர்கள் சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலருக்கு சக காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கையான அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தங்கள் பணியை உற்சாகமாக மேற்கொள்ளும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் காவலர்களை நேரில் அழைத்து வெகுமதியும் வழங்கி வருகிறார். ஏற்கனவே பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அன்றேய தினத்தில் அவர் கையெழுத்திட்டே பிறந்த நாள் அட்டை ஒன்றையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.