Asianet News TamilAsianet News Tamil

இறைச்சி கடைகளுக்கு எதிராக இந்து அமைப்பு தொடர்ந்த வழக்கு... ஐகோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்...!

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindu Munnetra Kalagam petition to high court  Butcher shops operating without permission during the curfew
Author
Chennai, First Published Jun 11, 2021, 5:02 PM IST

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

Hindu Munnetra Kalagam petition to high court  Butcher shops operating without permission during the curfew

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

Hindu Munnetra Kalagam petition to high court  Butcher shops operating without permission during the curfew

மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios