Asianet News TamilAsianet News Tamil

48 மணிநேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

heavy rain for tamilnadu
Author
Tamil Nadu, First Published Nov 14, 2019, 5:30 PM IST

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்து வந்தது. இதன்காரணமாக மாநிலத்தில் இருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வந்தன. பின் அரபி கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவி வந்த புயல்கள் தமிழகத்தை விட்டு நகர்ந்து சென்றதால் மழையின் தாக்கம் வெகுவாக குறைந்தது.

heavy rain for tamilnadu

புல்புல் புயல் கரையை கடந்த பிறகு தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெப்பச்சலனம் காரணமாக வங்கக்கடலில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியிருக்கின்றனர்.

heavy rain for tamilnadu

மேலும் நெல்லை, தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, விருதுநகர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பசலனத்தால் அடுத்த இரண்டு நாட்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios