குடும்ப தகராறு... அரசு பெண் மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை..!
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக அரசு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக அரசு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம், எஸ்.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவர் செங்கல்பட்டு அரசு மருத்தவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மகரஜோதி அதே மருத்துவமனையில் எலும்பு பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ரிஷித் என்ற மகனும் 4 வயதில் ஓமிஷா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சில தினங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வளர்மதியின் மகன் பள்ளிக்கு சைக்கிளில் செல்ல ஆசைப்பட்டுள்ளார். இதற்கு வளர்மதி எதிர்ப்பு தெரிவிக்க, கணவனுக்கும், அவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், மனமுடடைந்த வளர்மதி, படுக்கை அறையில், ஜன்னலில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.