சென்னை முழுவதும் மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் டோக்கன் பெற்றுக் கொண்டு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள வருகின்ற 21ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வருகின்ற 21ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. தற்போது வழங்கப்படும் டோக்கன்களை ஜூன் 2023 வரை பயன்படுத்த முடியும்.

அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்ள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் 40 மையங்களில் வரும் 21ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். 

நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி - துரைவைகோ

டோக்கன்கள், அடையாள அட்டைகளை பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள ட்டையின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.