சென்னையில் இந்தப்பகுதிகளுக்கெல்லாம் போகாதீங்க... அதிர வைக்கும் ரிசல்ட்..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக
திருவொற்றியூர் - 4, மணலி - 0, மாதவரம் - 3, தண்டையார்ப்பேட்டை - 20, ராயபுரம் - 64, திரு.வி.க நகர் - 31 அம்பத்தூர் - 0, அண்ணா நகர் - 22, தேனாம்பேட்டை - 18, கோடம்பாக்கம் - 24, வளசரவாக்கம் - 5, ஆலந்தூர் - 3 அடையார் - 7, பெருங்குடி - 7, சோழிங்கநல்லூர் - 4 மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 4
ஏப்ரல் 16 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 214 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.