தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா தொற்று உறுதியானால் பதற்றம் வேண்டாம்... ராதாகிருஷ்ணன் பகீர்..!
தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- கொரோனா பரவலை தடுக்க தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். அரசியல் தலைவர்கள், அவர்களின் தொண்டர்களை முகக்கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும். போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்கள்.
மதக்கூட்டம், உள் அரங்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவுகிறது. கொரோனா இறப்பு இல்லாத இறப்பு நிகழ்வுகளிலும் கொரோனா பரவுகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்பு வீதம் குறைந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பின்னரே எதிர்ப்பு சக்தி உருவாகும் ஆகையால், சமுதாய தடுப்பூசியான முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்