தமிழ்நாட்டில் கொரோனாவால் அண்ட முடியாத 4 மாவட்டங்கள்.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருந்தது கொரோனா பாதிப்பு. தினம் தினம் 80-90-100 என்கிற ரீதியில் பாதிப்பு எண்ணிக்கை தீவிரமாக இருந்தது. இவ்வளவுக்கும் அப்போது பரிசோதிக்கப்பட்ட எண்ணிக்கையும் குறைவு.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் பாசிட்டிவ் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இன்று ஒரே நாளில் மொத்தம் 2739 பரிசோதனை செய்யப்பட்டதில் வெறும் 38 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இன்னும் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இன்று பாதிப்பு எண்ணிக்கை பெரியளவில் இல்லையென்பதால், எந்த மாவட்டத்திலுமே பெரியளவில் தாக்கம் இல்லை. இன்று ஒரே நாளில் 37 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 13 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 214
கோவை - 126
திருப்பூர் - 79
ஈரோடு - 70
திண்டுக்கல் - 65
நெல்லை - 57
செங்கல்பட்டு - 50
நாமக்கல் - 45
திருச்சி - 43
மதுரை, கரூர், தேனி - 41
திருவள்ளூர் - 40
ராணிப்பேட்டை - 39
நாகப்பட்டினம் - 38
தூத்துக்குடி - 26
விழுப்புரம் - 23
சேலம் - 22
கடலூர் - 20
திருப்பத்தூர், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் - 17
கன்னியாகுமரி, வேலூர் - 16
திருவண்ணாமலை - 12
சிவகங்கை - 11
நீலகிரி, தென்காசி - 9
காஞ்சிபுரம் - 8
ராமநாதபுரம் - 7
கள்ளக்குறிச்சி - 3
அரியலூர் - 2
பெரம்பலூர் - 1.