#BREAKING சென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... பாதிப்பு புதிய உச்சம்.. பீதியில் பொதுமக்கள்..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000ஐ நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 7000ஐ நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 6,984 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,47,129ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3வது நாளாக கொரோனா தொற்றால் 2,482 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,69,614ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 83,332 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,06,86,440 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,203 பேர் ஆண்கள், 2,781 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,71,717 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,75,376 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 3,289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,84,199ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர் இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,945ஆக அதிகரித்துள்ளது. தற்போது 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.