தமிழ்நாட்டில் இன்று மேலும் 5975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 5975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்துள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

தமிழ்நாட்டில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தும் வகையில், அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில், இன்று 70,127 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், மேலும் 5975பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,79,385ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 1298 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,389ஆக அதிகரித்துள்ளது.
இன்று 6047 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,19,327ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 6517ஆக அதிகரித்துள்ளது.
