Asianet News TamilAsianet News Tamil

Chennai Traffic Change: பிரதமர் மோடி வருகையால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் ரோடு ஷோவை கருத்தில் கொண்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியருப்பதாவது:

chennai traffic changes announced due to pm roadshow tomorrow sgb
Author
First Published Apr 8, 2024, 7:35 PM IST

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடுக்கு வரும் பிரதமர்் மோடி சென்னையில் நாளை ரோடு ஷோவில் பங்கேற்று மக்களைச் சந்திக்கிறார். இதனை முன்னிட்டு சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இத்துடன் பிரதமர் ரோடு ஷோவை கருத்தில் கொண்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 9) மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இரண்டு கம்பெனியில் ரகசியமாக வேலை பார்த்து ரூ.1.4 கோடி சம்பாதித்த கில்லாடி ஐ.டி. ஊழியர்!

வாகனப் பேரணியின் நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் (Goods Vehicle) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும்.

* பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள்.

* மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.

* CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.

* வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

* கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள்.

* CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

* டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

* அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கவலையே வேண்டாம்! கடற்படையின் புதிய VLF ரேடார் ஸ்டேஷன் திட்டம் ரொம்ப பாதுகாப்பானது!

Follow Us:
Download App:
  • android
  • ios