தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம் மண்டலம்:

கீழ்கட்டளை, பல்லாவரம் திருவள்ளுவர் நகர், சௌந்தரராஜன் நகர், கலைவாணி தெரு, அம்பாள் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கிண்டி மண்டலம்:

மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, எல்ஐசி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், மூவரசம்பேட்டை, ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ஜெயலட்சுமி நகர், அருள் முருகன் நகர், அண்ணா நகர், கார்த்திகேயபுரம், புழுதிவாக்கம் வெங்கடராமன் தெரு, ஆண்டவர் தெரு, ஈவிஆர் காலனி, சர்ச் தெரு, அம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கே.கே.நகர் மண்டலம்:

சூளைமேடு, தசரதபுரம், கோடம்பாக்கம், அசோக் நகர், நெசப்பாக்கம், சாலிகிராமம், ரங்கராஜபுரம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், வளசரவாக்கம், அழகிரி நகர், ஆழ்வார்திரு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர் மண்டலம்:

மேனாம்பேடு, ஒரகடம், கருக்கு, பானு நகர், கங்கை நகர், புதூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.