தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஆலந்தூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாம்பரம் பகுதி:

பல்லாவரம் மல்லிகா காலனி, பரத் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, கடப்பேரி ஜீவா தெரு, குமரன் தெரு, காமராஜர் நகர், அப்பாராவ் காலனி, மாதவன் தெரு, காமாட்சி காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கே.கே. நகர் பகுதி:

அசோக் நகர், எம்ஜிஆர் நகர், கோடம்பாக்கம் பகுதி, வளசரவாக்கம், சின்மயா நகர், சூளைமேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஆலந்தூர் பகுதி:

எம்.கே.என்.சாலை, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஜிஎஸ்டி ரோடு, வேளச்சேரி ரோடு ஆதம்பாக்கம் கருணீகர் தெரு, கக்கன் நகர், என்.ஜி.ஓ.காலனி, திருவள்ளுவர் மெயின் ரோடு ராஜ்பவன் ரேஸ் கோர்ஸ் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

போரூர் பகுதி:

மாதா நகர் மெயின் ரோடு, முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து நகர், கிருஷ்ணா நகர், ராபிட் நகர் எஸ்டேட், ரங்கா நகர், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யூ, குன்றத்தூர் சாலை, ஆர்.இ.நகர் 5வது தெரு, ராமகிருஷ்ணா நகர், ராஜ ராஜேஸ்வர் நகர் ஒரு பகுதி, ராமசாமி நகர், பூந்தமல்லி ராணி விக்டோரியா சாலை, சரவணா நகர், பலராமன் நகர், சுமித்ரா நகர், பூந்தமல்லி பைபாஸ் சாலை, திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், லட்சுமி நகர், கொல்லர் தெரு, மெட்ரோ கிராண்ட் சிட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

மேலூர் பகுதி:

மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, பிடிஓ அலுவலகம், சீமாவரம், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, கரையன்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.