தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாம்பரம் பகுதி:

மடம்பாக்கம் சுதர்சன் நகர், விஜிபி சீனிவாச நகர், அரவிந்தர் நகர், அம்பிகா நகர் கோவிலம்பாக்கம் மேற்கு அண்ணாநகர், வேளச்சேரி மெயின் ரோடு, சிட்டி பாபு நகர், பரசுராம் நகர், சக்ரவர்த்தி நகர், நியூ காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர் பகுதி:

சின்ன காலனி, பெரிய காலனி, நாகேஸ்வர ராவ் சாலை, பிரின்ஸ் அபார்ட்மென்ட், பிகேஎம் சாலை, கணேஷ் தெரு.

வண்ணாரப்பேட்டை பகுதி:

நேதாஜி நகர், நேரு நகர், சிவாஜி நகர், இ.ஹெச்.ரோடு, பட்டேல் நகர், நாவலர் குவார்ட்டர்ஸ், பர்மா காலனி, கருணாநிதி நகர், நெடுஞ்செழியன் நகர், எழில் நகர், திருவள்ளுவர் நகர், ஜே.ஜே.நகர், ஜீவா நகர், பாரதி நகர், புதிய சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.