Asianet News TamilAsianet News Tamil

மனைவி இறந்த சோகம்.. அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அனாதையான 3 குழந்தைகள்..!

கோயம்பேட்டில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

chennai husband, wife suicide... police investigation
Author
Chennai, First Published Oct 14, 2020, 6:45 PM IST

கோயம்பேட்டில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் தியாகராஜன்(35). கார்பென்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா(30). இவர்களுக்கு 2 மகன்கன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே சத்யா நெஞ்சு வலியால் அவதிபட்டு வந்தார். கடந்த 11ம் தேதி வலி அதிகமானதால் விரக்தியில் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், தியாகராஜன் மற்றும் பிள்ளைகள் மிகுந்த சோகத்திலும் வேதனையில் இருந்து வந்துள்ளனர். இருப்பினும் மனைவி இறந்த சோகத்தில் இருந்து மீளமுடியாத துயரத்தில் தியாகராஜன் இருந்து வந்தார்.

chennai husband, wife suicide... police investigation

இந்நிலையில், நேற்றிரவு மனைவி இறந்த அதே இடத்தில் புடவையில்  தியாகராஜன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், தந்தையின் உடலை பார்த்து பிள்ளைகள் கதறி துடித்தனர். இதுதொடர்பாக உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  தியாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

chennai husband, wife suicide... police investigation

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios