Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் ஹாலிவுட் பட பாணியில் விபத்து.. 5 கல்லூரி மாணவர்கள் உடல்நசுங்கி துடிதுடித்து உயிரிழப்பு.!

பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே அடையாளம் தெரியாத வாகனம் கார் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது.

car - lorry accident... 5 College students dead
Author
chennai, First Published Sep 5, 2021, 11:21 AM IST

சென்னை பெருங்களத்தூர் அருகே லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள்  உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்தனர். பின்னர் நண்பர்களுடன் திநகரில் பொருட்களை வாங்கிவிட்டு இரவு 12 மணியளவில் வண்டலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

car - lorry accident... 5 College students dead

அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே அடையாளம் தெரியாத வாகனம் கார் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். 

car - lorry accident... 5 College students dead

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 5 பேரும் நாளை நடைபெறவிருந்த ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 5 பேரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios